கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, May 5, 2010

அழிவுக்கும் மழை ...

அவள் என்னைப் பார்த்தாள்,
என்னுள் சாரல்;
என்னைப் பார்த்து சிரித்தாள்,
சாரல் இப்போது தூரல்;
என்னிடம் பேசினாள்,
தூரலுக்குப் பிறகு சிறு மழை;
காதலைச் சொன்னாள்,
நல்ல மழை;
காலம் கடந்தது , அப்பா அம்மா என்றாள் ,
மழை இன்னும் விடவே இல்லை ;
இப்போது புரிந்தது - அது
விளைச்சலுக்கு அல்ல
வெள்ளத்துக்கு. .

No comments:

Post a Comment