கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Thursday, May 6, 2010

சும்மா.. செல்லு செல் ஆ பெயர்த்து எடுத்துடனும் டா !!!

ஆராய்ச்சியாளர்களின் விடாத முயற்சி, சிறிது மகிழ்ச்சி தர கூடிய முடிவைத் தந்துள்ளது. முழுவதுமாக இல்லையானாலும் முதற்படி வைத்தனர் அவர்கள்.

கடந்த வருடம் 27000 நபர்களைக் கொன்றதாக சொல்லப் பட்ட முயற்சி, மிக நீண்ட ஆய்வுக்குப் பிறகு 512 பேரின் ஆயுட்க்காலத்தை நீட்டித்ததாக முடிந்தது.

"முயற்சி திருவினையாக்கும்" .

மருந்து ஒன்றும் புதுதில்லை, நோயாளியின் செல்களே மருந்து என்கிறார்கள் .

"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்" என்ற நமது முன்னோர் வார்த்தை எவ்வளவு தெளிவானதொன்று. பலே பலே

நோயாளியின் உடலில் இருந்து எதிர்ப்புச் சக்தி உள்ள செல்களைப் பிரித்தெடுத்து , அதை ப்ராஸ்ட்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களில் உருவாகும் புரதத்தோடு இணைத்து ,அதை மீண்டும் பாதிக்கப்பட்ட செல்களில் செலுத்தும் போது, அது புற்றுநோய் செல்களைத தாக்குகிறது என்பது boston ஐ சேர்ந்த philip kantoff ன் விவாதம்............... சபாஷ் டாக்டரே !!!!

அவர் மேலும் சொல்கிறார் " இன்னும் 5 முதல் 10 வருடங்களில் மற்ற அனைத்து விதமான புற்றுநோய்க்கும் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக செய்து காண்பிப்பேன்" ..........
என்னாப்பா பேசிகிட்டே போர !!!
நாங்களும் சொல்வோம் எங்க ஊர்லயும் ஒரு டாக்டருக்கு IQ அதிகமாய்த்தான் இருந்ததுதுதுதுது ......

No comments:

Post a Comment