கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, May 5, 2010

எனது பொன்மொழிகள்

* திருமணம் முடிந்தது ;
முதல் வருடம் : அவன் பேசினான், அவள் கேட்டாள் ;
2 வது வருடம் : அவள் பேசினாள், அவன் கேட்டான் ;
3 வது வருடம் : இருவரும் பேசினர் , ஊரே கேட்டது
* திருமணம் ஆவது என்பது நண்பர்களுடன் நல்ல உணவு விடுதி செல்வது போன்றது ;
நமக்கு தேவையானதை ஆர்டர் செய்த பிறகு, நண்பன் ஆர்டர் பண்ணத பண்ணிருக்கலாமோ , அது நல்லா இருக்குமோன்னு தோணும்
* காதல் என்பது கனவு காண்பது போன்றது, கல்யாணம் என்பது அதுக்கு நாமே வைத்துக்கொள்கிற அலாரம் போன்றது.
* திருமணத்துக்கு முன்னால் பெண்ணின் கைப் பிடித்தால் அது காதல் , திருமணத்துக்குப் பின்னால் அவள் கைப் பிடித்தால் அது தற்காப்பு
( அவளிடமிருந்து )
* திருமணமான புதிதில் ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் நமக்கு காரணம் புரிகிறது , பத்து வருடங்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருந்தால் ஆச்சர்யம் தான் வருகிறது .
*காதலன் காதலியிடம் சொன்னான் " அன்பே, உனக்காக நான் நரகம் கூட செல்வேன்" . திருமணம் நடந்தது. உண்மையில் அவன் வாக்குத் தவறாதவன்.
* நண்பன் உன் மனைவியை விரும்புகிரானேன்றால், அதை விடப் பெரிய வழியில் எப்படி அவனைப் பழி வாங்கிட முடியும் உன்னால்.
* திருமணமானவன் பெண்டாட்டிக்காகக் காரின் கதவைத் திறக்கிறான் என்றால், ஓன்று அவன் கார் புதிது, இல்லை அவன் பெண்டாட்டி .

No comments:

Post a Comment