கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, July 19, 2010

மாலத்தீவு மாயமாகுமா ?



வெப்ப நிலை உயர்வு காரணமாக மாலத்தீவுகள் மூழ்கி விடும் என்று அவர்கள் நீருக்கடியில் கூட்டம் போட்டது அனைவரும் அறிந்ததே. வரவேற்கத்தக்கது. அது தொழிநுட்ப வளர்ச்சியைக் காட்டுகிறது. மேலும் ஒன்றும் செய்யாமல் இருக்கும் மூளைக்கும், சுடோக்கு விளையாடும் மூளைக்கும் உள்ள வித்தியாசம் போல ஏதோ ஒன்று செய்து விட்டு போகிறார்கள். சிந்தனை வளரட்டும் .

ஆனால் உண்மையில் நீரின் மட்டம் உயரும் பொது மாலத்தீவுகள் மூழ்குமா என்பது கேள்வியாகிறது.
கோரல் பாளிப்புகள் என்ற உயிருள்ள தாவர இனம் தான் இம்மாதிரி சிறு சிறு தீவுக் கூட்டங்கள் உண்டாக காரணம்.

முதலில் தீவுக் கூட்டங்கள் எங்கெங்கு உருவாகிறது என நோக்கினால், எரிமலைக் குழம்பு மேல் வந்து காயும் போது, கோரல் பாளிப்புகள் எனும் இத்தவரக் கூட்டம் மண்டும் இடங்கள்.

இதில் மாலத்தீவுகள் இரண்டாவது வகை.

இவ்வகையான கோரல் பாளிப்புகள் சில எல்லைகள் உண்டு. அந்த எல்லைக்குள் தான் வளரும். உதாரணமாக 27 டிகிரி வெப்ப நிலை; அலைகள் குறைவான பகுதி போன்ற சில. இன்னொரு அழகு, கடல் மட்டம் உயரும் போது அதுவும் வளரும். உயரம் குறையும் போது அதுவும் குறையும். ஆகா நீர்மட்டத்திற்கு மேல் அதன் உயரம் மாறாதது.

திடீரென வரும் சுனாமி அலை, வேதிப் பொருள் கலப்படம் போன்ற காரணங்களாலேயே அழிகிறது. அதுதான் இந்த தீவுக் கூட்டங்களின் வளர் தளம் எனும் போது, வெப்ப நிலை உயர்வால் கடல் மட்டம் உயரும் போது அதுவும் வளர்ந்து மட்டம் உறுதி செய்யப் படவேண்டுமே.

ஏன் அவ்வாறு இல்லை ?



.