கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, May 17, 2010

சோவுக்கு கடிதம்

அன்புடைய திருமிகு சோ அவர்களுக்கு,

பண்புடன் எழுதும் கடிதம். நலம். தங்கள் நலமறிய அவா. நான் தங்களின் பரம ரசிகனாக இருந்தேன் என்றே சொல்லலாம். தங்களது இயல்பான நகைச்சுவை, பேச்சு நடையில் மகிழ்பவன். பல முறை என் நண்பர்களிடம் தங்களைப் பற்றி வாதாடி இருக்கிறேன்.
நிற்க
இந்த வாரம் தங்களின் "துக்ளக்" வாங்கிப் படித்தேன், ஒரு எதிர் பார்ப்போடு. (19 .05 .2010 அன்றுக்கானது. மேலும் ரூபாய் 8 .) படிக்க ஆரம்பித்ததும் தங்களின் மீது மதிப்பு கொண்டமைப் பற்றி என்னையே நான் ஒரு முறை கேட்டுக் கொண்டேன். முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை உங்களின் மரக்கிளைகளில் உள்ள இலைகளிலிருந்து காற்று அடித்ததே தவிர பத்திரிக்கையாளனுக்கான அழகு தெரியவே இல்லை. வருந்துகிறேன்.

முதல் பக்கத்தில் அம்மாவின் படம், அடுத்து அம்மாவின் அறிக்கைகள், அடுத்து அம்மா எதுவும் செய்ய வில்லை என்பதால் அந்த இடம் காலியாக விடாது, தாங்களாகவே ஆளுங்கட்சியை ஏசத் தொடங்கி விட்டீர்கள் போல. செந்தமிழ் மாநாட்டுக்கும், நிலக்கரித் தன்மை குறைப் பாட்டுக்கும் ஆளுங்கட்சியைக் குறை சொல்லி ஆகிவிட்டது. பின்னர் அபத்தத்தின் உச்சம் ஒரு பேட்டி வடிவில். அடுத்த இதழில் அக்னி வெயில் தாங்க வில்லை, மழை இல்லை. பேருந்தில் உள்ளே காற்று வர வில்லை. இறுதியாக எனக்கு கக்கா வர வில்லை. இது எல்லாவற்றிக்கும் காரணம் இவரின் ஆட்சிதான் என்பது கண்டிப்பாக இருக்கும். (எதிர் பார்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் இனி அந்த பக்கமே போக விரும்ப வில்லை)

நான் ஆளுங் கட்சிக்கு சாதகமானவன் இல்லை. விமர்சிக்க வேண்டாம் என்றும் சொல்ல வில்லை. தங்களது விமர்சனத்தில் ஒரு தரம் இல்லை. புத்தகத்தை கீழே கொண்டு சென்று துடைக்கத் தூண்டுகிறது. கேள்வி பதில்களிலும் அபத்தமே மிஞ்சுகிறது.

எனது ஆதங்கம் என்னவென்றால் இத்தனை வருடம் பத்திரிக்கை நடத்தும் தங்களுக்கு இன்னும் தர்மம் தெரிய வில்லையா. இல்லை உங்களவா களுக்கே உள்ளதா இது.

இதுவரை ஆயிரக் கணக்கில் செலவு செய்திருந்தாலும் இந்த 8 ரூபாயை செலவு செய்தது எனக்கு மிகுந்த வெட்கத்தைத் தருகிறது. பிச்சைக்கரர்களிடம் கொடுத்திருக்கலாம். உண்டு புகழ் பாடி இருப்பார்கள்.

உங்களது பத்திரிக்கையை வெளி உலகத்துக்கு விடாது உங்களவா க்குள் படிக்க வேண்டுகிறேன். மேலும் எனது உறுதிமொழி இதோ : இனி எக்காரணம் கொண்டும் தங்களது துக்ளக் வாங்குவதில்லை .படிப்பதில்லை.

இதற்க்கு பின்னூட்டங்கள் இருக்கலாம் " உன்ன யாருடா அவர மதிக்க சொன்னதுன்னு " . தவறு செய்ததை ஏற்கிறேன்.

2 comments:

  1. Cho .. N ram are the mudhal ethiri to tamilan or Dravidian..you should be the cultprit to blame to buy thuklak / or Hindu...dont waste ur money hereafter on this..

    ReplyDelete
  2. தாமதமான முடிவு என்றாலும் சரியான முடிவு. தமிழன்
    பார்ப்பானுக்கு காசு கொடுப்பதை நிறுத்தினால் தானாகவே திருந்துவார்கள்.

    மகாராஜா

    ReplyDelete