கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Thursday, November 11, 2010

காரணம் இல்லாமல் காதலும் இல்லை


இது பெண்களுக்கு எதிரானது அல்ல

பெண்கள் சுயநலக்காரர்கள் எனவும், பாதுகாப்பு வேண்டிய பச்சோந்திகள் எனவும் நண்பர்களிடையே வாதம் உண்டு. இருக்கும் பட்சத்தில் அதற்கான காரணங்களை யூகித்தேன்.


மானுடவியலின் படி முதலில் இருந்தது பெண்களின் காலம். மேலும் அந்த காலத்தில் குடும்பம், திருமணம் போன்ற அமைப்புகள் இல்லை; வேலை செல்லும், வேட்டை ஆடும் எந்த வலிமையான ஆடவனுடனும் செல்ல வழி இருந்தது. அங்கு போட்டி, சுயநலம், சதி அனைத்தும்பெண்களிடையே பெண்களை வெல்ல உதயமாயிருக்கக் கூடும். அதுவே அவர்கள் இரத்தத்தில் ஊறி இருந்திருக்க வேண்டும்.



அடுத்து, பொருள் சேகரித்து பாதுக்காப்பதற்க்காக தனக்கு என்று மனைவி என ஒருத்தியை ஆண் நியமித்து வீட்டை, குடும்பத்தை ஆளவைத்தான். அது முதல் வீட்டில் அடைபட்டாள் அவள் விருப்பத்தோடு, அது ஆண்களின் காலம் (தந்தையர்). இந்நாட்களில் பெண்களுக்கு வேறு பிடிமானம் இல்லாததால் அவள் அவனைப் பற்றிக் கொள்ளும் பொருட்டு சதி செய்ய வேண்டி இருந்தது சுயநலம், பாதுக்காப்பிற்காக. மேலும் அவள் தன கணவனானவன் , அவன் அம்மா, குழந்தைகளிடம் பாசம் காட்டும் போது பற்றுதல் மட்டும் இல்லாமல் பணம் காசும் பகிரப் படும் என்பதால் சதி செய்கிறாள். நல்ல ஆடவனை தேர்ந்து எடுக்கவும் துணிகிறாள்.


தற்காலங்களில் அனைவரும் வெளியில் செல்லும் போதும் அந்த ஒரு பயம் பெண்களின் மனதில் விலகாமல் பாதுகாப்பு தேடுகிறது. அதனாலே விரைவில் மூளை சலவை செய்யப் படுகிறார்கள். காதலும் இடம் மாறுகிறது.



முடிவில் காதல், பாசம் என்றால் என்ன ??