கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, May 5, 2010

மனிதாபிமானம்.

ஒரு மேடை, அதில் பேச்சோ, கருத்தரங்கமோ, கவிதையரங்கமோ எதோ ஓன்று மிக விமரிசையாக நடக்கிறது. யாரோ பேசிக் கொண்டிருக்கிறார். மேடையில் பல பேர் வழக்கம் போல அமர்ந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அப்போது அங்கே எல்லா இடத்திலும் உள்ளது போலவே ஒருத்தர் தாமதமாக வருகிறார் . வந்தவர் படிகளில் இடற எல்லோரும் தடுமாறி அவரைக் காக்க விரைகிறார்கள் ஒருவரைத் தவிர. அவர் அமர்ந்த இடத்திலேர்ந்து எழவில்லை.

பாரி சொல்கிறார் அவருக்கு கேட்காத மாதிரி, "ச்சே, என்ன மனிதரப்பா , ஒரு மனிதாபிமானம் வேண்டாம் மனிதருக்கு. அப்படியே கல் மாதிரி உட்கார்ந்து இருக்காரே " .
நிலைமை கட்டுக்குள் வந்தது. பாரியின் கைப்பேசி ஒலித்தது. உரையாடல் முடிந்து அணைத்து, அவர் தம்பிக்கு அழைத்து சொன்னார் " டேய், அம்மாவை போய் பாரு, ஹார்ட் அட்டாக்காம். எனக்கு மீட்டிங் முடிஞ்சு சின்ன பார்ட்டி இருக்கு . நாளைக்கு வரேன். "

மனிதாபிமானம்.

No comments:

Post a Comment