கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, May 28, 2010

பொது நலப் பிரச்சினை

இந்த ஆந்திராவில் மட்டும் எதாவது பிரச்சனைன்னு சொன்னால் எதுக்காக அது என்று பல முறை யோசிக்க வேண்டியுள்ளது. 25 மே அன்று எனது சொந்த வேலையின் பொருட்டு சென்னை செல்ல வேண்டியிருந்தது. மீண்டும் கிளம்பும் வேளையில் நடந்த நிகழ்வு :-
இரண்டே நாளில் 1200 km பயணம்,
பயணம் ரயிலில், 27 மே அன்று இரவு 11 .25 க்கு சென்னையில் துவங்க வேண்டிய பயணம் 30 நிமிடம் தாமதம். அது வழக்கம் தானே என்று ஒன்றும் சொல்ல இயலாமல் ஏறி அமர்ந்தேன் .
அடுத்த நாள் காலையில் ஆந்திராவில் வாரங்கல் ஐத் தொடும் தூரத்தில் உள்ள ஊர் மகாபுபாபாத். அந்த ஊரில் திடீரென ரெயில் நின்றது. ஒரு மணி நேரம் , இரண்டானது , மூன்றானது எடுக்க வில்லை. இறங்கி எட்டிப் பார்த்தால் தொடர் வண்டியின் கடைசிப் பெட்டியை, அங்கிருக்கும் சில மாக்கள், (மன்னிக்கவும் எழுத்துப் பிழை). மக்கள் சிலர் கல்லால் அடித்தப் படியும், துப்பாக்கியால் சுட்டப் படியும் இருந்தனர்.
என்ன எது என்று ஒன்றும் புரிய வில்லை .
வண்டியின் உள்ளே விவாதம் தொடங்கியது. பிரச்சினை என்னவாக இருக்கும்.
$ நக்சலைட் தொல்லையாக இருக்குமோ என ஒரு சாரார்.

$ அரசியல் பிரச்சினையாக இருக்கும் என ஒரு சாரார்.
$ தெலுங்கானா பிரச்சினையாக இருக்கலாம் என ஒரு சாரார்
$ முன்னணி ஹீரோவின் படம் நன்றாக ஓட வில்லை என்பது கூட காரணமாக இருக்கலாம் என ஒரு சாரார்.
$ பொழுது போகாமல் இருக்கலாம் என ஒரு சாரார்.
இறுதியில் எனக்கு மாலை தொலைக்காட்சி செய்திகள் பார்த்ததும்தான் தெரிய வந்தது அது ஒய் எஸ் ஆர் மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்று.

என்னுடம் பயணம் செய்தவர்கள் பற்றிய விவரம் ,
*ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டியிருந்த குடும்பம். ( 9 மணிக்கு திருமணம், இங்கு மணி 12 .30 மதியம். )
*வயதான முதியவர் ஊருக்கு போக வேண்டி.
*ஒருவர் வேலைத் தொடர்பான நேர்முகத் தேர்வுக்கு போக எண்ணி .

இன்னொரு 25 வயது இளைஞனுக்கு மட்டும் சந்தோசம். ஏனென்றால் அந்த அறையில் உள்ள 16 அல்லது 17 வயது உள்ள ஒரு பெண்ணுடன் கண்களால் பேசிக் கொண்டிருந்தான்.

moral of this post :
அந்த இளைஞன் கெட்டிக் காரன்

2 comments:

  1. நீங்கள் கெட்டிக்காரர் தானே தோழர் RRR...

    ReplyDelete
  2. (நீங்கள் கெட்டிக்காரர் தானே தோழர் RRR...)


    மன்னிக்கவும் நண்பரே , அது ஒரு இளைஞன் என்றுதான் சொன்னேனே அன்றி அது நான் இல்லை.

    ReplyDelete