கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Saturday, May 15, 2010

கறுப்பு பணம், வெளுப்பாகிறது

ஒருவருக்கு தன்னிடமுள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தை வெளுப்பாக்க வேண்டுமென்றால்,
அவர் இப்படித்தான் செய்கிறாராம்.

முதல் படி, தன்னுடைய மச்சானை அழைப்பார்.
இரண்டாவது, அவரை நகைக் கடை ஒன்றுக்கு அனுப்புவார்.
மூன்றாவது, மச்சானும் அங்கு சென்று 10 தங்கக் கட்டிகளை வாங்குவார். ஒன்றின் விலை 10 இலட்சமாக இருக்கும். அதற்குப் பதிலாக இவர் ஒரு கோடிக்கான காசோலை ஐ கொடுத்து செல்வார்.
நான்காவது, மச்சான் தற்போது அந்த தங்கக் கட்டிகளை அன்பளிப்பாக அனுப்பியவருக்குத் தருவார்.
ஐந்தாவது, அந்த மகான் அதைப் பெற்று கொண்டு நேராக அதே கடைக் காரரிடம் சென்று அதை ஒரு கோடிக்கு விற்று வெற்றியுடன் திரும்புவார்.
இப்போது அவரது ஒரு கோடி உழைத்து வந்த பணம் அல்லவா!!!

ஆனால் ,,,,,,

இது மே மாதம் வரை செல்லு படியாகிறது. ஜூன் முதல் அரசாங்கம் அதுக்கும் செக் வைக்கிறது.
இன்னொருவரிடமிருந்து பெறப்படும் தங்கக் கட்டிகளுக்கும் இனி வருமான வரி கட்டப் பட வேண்டும்.

நான் எதிர்ப்பார்க்கிறேன் , அதையும் சமாளிக்கும் திட்டங்கள் இருக்கும் அவர்களிடம்.

அட, இப்பப் பாருங்களேன்,எனது சட்டைப் பையில் உள்ள கிழிந்து போன 5 ரூபாயை எப்படி மாத்துறதுன்னு தெரியலங்க எனக்கு.

1 comment: