கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, March 2, 2011

ஏமாற்றம் # செய்வினை, செயப்பாட்டு வினை


9 வது 10 வது படிக்கும் போதே கூடை கூடையாக மீன் கிடைத்தது; சிறு வயதிலேயே தின்றால் மூளை மங்கி விடும் என எண்ணி அதை தின்ன வில்லை. 

முருகன் பிறந்த  மாதம் பள பளவென மின்னியது. நெய் சோறே கண்ணில் பட்டது. பருமன் ஏறினால் தாங்காது என விலகி விட்டேன்.
  
இரண்டு வருடங்கள் கழிந்ததும், காற்று அடிக்க ஆரம்பித்தது. இதமான காற்று வாங்கலாம் என எண்ணி வெளியில் சென்றேன். அவ்விடம் அடியேனின் முட்டாள் தனம், சட்டை அவிழ்த்து அனுபவிக்காமல் முழுதும் உடுத்தி அனுபவித்ததால் வெக்கைதான் மிஞ்சியது.

வெளியில் வந்தேன், இசையும் கவிதையும்  எனைப் பிசைந்தது; மிரட்டியது; குழந்தையின் அழுகையும், சிரிப்பும் கலந்து கேட்டது. மீண்டு எழுந்தேன்; மீண்டும் எழுந்தேன் 

இறுதி வரை இந்த முட்டாள், மந்திரம் ஓதினால் நினைத்தது கிட்டும் என தினம் தினம் மந்திரம் ஓதத் துவங்கினேன்; அனுபவித்தே ஓதினேன். அதில் மெய் மறந்தேன். இறுதியில் தெரிய வந்தது,

"கடவுள் இல்லை". 

செய்த தவறுகள் என்ன? முட்டாள் என்பது முறையா?
இல்லை

மீனே போதும் எனத் தின்றிருந்தால் தூண்டில் கிடைத்திருக்காது; நீந்தவும் தெரிந்திருக்காது;

இப்போது வித்தகன் இல்லைஎனினும் வாழத் தெரிந்தவன்; வாழவும் தெரிந்தவன்;

மீன் - இன்னொருத்தன் தின்றான்; தின்பான்  
காற்று - இன்னொருத்தனையும் தீண்டியது; தீண்டும்
மாதம் - மற்றோருவனுக்கும் 
கவிதை - படிப்பவன் வருவான் 
மந்திரம் - அவாளுக்கு மட்டும்            

இவன் படிக்க,  புத்தகம் கிடைக்கும்

இனியும் நான் எத்தனிப்பதில்லை; ஆனால் செத்தவனையும் சீண்டிப் பார்க்கும் உலகம் இது. 


இறுதியில் இவன் ஏமாற்றவும்  இல்லை; ஏமாற்றப் படவும் இல்லை
 

2 comments: