கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, June 18, 2010

ஒரே ஒரு ஒப்பம்


ஒரு அரசு அலுவலகத்தில் கையொப்பம் வாங்க வேண்டிய வேலை. சரி, ஒரு நாளில் வாங்கி விடலாம் என்று ஒரு நாள் விடுப்பு எடுத்து கொண்டு காலையில் அவசர அவசரமாக கிளம்பி, அவசரத்தில் காலையில் எப்பொழும் சுவைக்கும் காபி , செய்தித் தாள் மறந்து, கூட்டம் சகிக்காத 23c பேருந்தில் ஏறி, சில்லறை இல்லாமல் அசிங்கமாக சென்னைத் தமிழில் நடத்துனரின் திட்டும் வாங்கி, மற்றவர்கள் மத்தியில் அசிங்கத்தைக் காட்டாது இருக்க, வழிய ஒரு சிரிப்பை வரவழைத்து வியர்வை நாற்றத்துடன் இறங்கும் பொழுது காலை 9 .30 .


அப்பாடா 10 மணிக்கு முன்பாக வந்து சேர்ந்தோம் என மகிழ்ச்சியில் அந்த அலுவலகத்தில் நுழைந்தேன். அந்த பியூன் என்னை ஏற்றம் இறக்கமாக பார்த்தான். புரியவில்லை.

10 மணி ஆனதும் எல்லோரும் உள்ளே வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டதே என சிறு வேகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களைத் தொந்தரவு செய்வது நன்றாக இருக்காது என எண்ணி சற்று வெளியே இருக்கலாம் என நேரங்கடத்த , வெளியில் வந்தேன்.

திடீரென காலையில் காய்கறி வாங்கி கொடுக்க மறந்தது ஞாபகம் வர, அம்மாவுக்கு தொலைபேசியில் அழைத்து பேசி விட்டு , அப்படியே ஆபீசிலும் என்ன நிலவரம் என தெரிந்து கொண்டு ஒரு தேனீர் கடையில் நேரம் கடத்தி கொண்டு இருந்தேன்.

மணி இப்போது 10 . 15 , இன்னும் 10 நிமிடம் போகட்டும் என எண்ணி தினத் தந்தியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பை ரசித்தேன். ( என்ன மனிதன் நான் ?) .
10.25 . இப்போது எல்லோரும் அமைதி ஆகி இருப்பார்கள் என்று எண்ணி உள்ளே சென்ற எனக்கு முதல் திகைப்பு எதிர்பார்த்த அமைதி இருந்தது. ஆனால், யாருமில்லாத அமைதி. என்னையே ஒரு முறை கேட்டுப் பார்த்தேன் இன்று ஞாயிறோ என்று. இல்லை.

பியூனை கேட்டேன் . " அய்யே, மணி இன்னா இப்போ பத்தரைதானே , வருவாய்ங்க. போயி அங்க குந்து " என்ற பதில். திகைப்புடன் அமர்ந்தேன்.

10 . 45 .. ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்தார்கள். யாருக்குமே பதற்றம் என்பது சிறிதும் இல்லை. நான் பார்க்க வேண்டிய ஆளும் வந்தார். உடனே செல்லாமல் 5 நிமிடம் கடந்து செல்ல நினைத்து எல்லோரையும் நோட்டம் விட்டேன். யாரிடமும் பதற்றம் இல்லை. எல்லோர் கையிலும் செய்திதாள்களும், வார புத்தகங்களும். பெண்களிடத்தில் வார மலர் , குடும்ப மலர். தவிர மறந்தும் யாரிடமும் கோப்போ, பேனாவோ இல்லை. பின்னர் ஒரு வேலை முடிய வருடக் கணக்கு ஏன் ஆகாது என என்னை கேட்டுக் கொண்டே, அவரிடம் சென்றேன்.

அப்போது வெளியில் இருந்த பியூன் சொன்னான்.
"மணி 11 . தேனீர் இடைவேளை"... வந்து 5 நிமிடத்தில் இடைவேளை. எப்போ முடியும் எனக் கேட்டேன். அவன் சொன்னான் " அரை மணி நேரம் என்று".. கடியாக 11 .30 க்கு உள்ளே சென்றேன். அடுத்த 5 நிமிடத்தில் அவர் வந்தார். அவரிடம் சென்ற போது ஒரு பத்து நிமிடம் கழித்து வாருங்கள் வேலை இருக்கிறது என்று சொன்னார் . எதிர் பார்த்த பதில் தானே. சென்று அமர்ந்தேன். 15 நிமிடத்தில் உள்ளே சென்ற போது , வாங்கி பார்த்து கொண்டே என்னங்க இது இப்படி வந்து வேலையில தொந்தரவு பண்றீங்களே என்று நொந்து கொண்டார் ... உண்மைதான்

அப்புறம் தான் நடந்தது காமெடி. கேட்டாரே பார்க்கலாம் , ஏங்க, உங்க பாட்டனார் இறந்ததா சொல்றீங்களே எப்போ இறந்தார் ?... நானும் சொன்னேன் ஒரு 25 வருடம் இருக்கும். அப்போ அவரோட இறப்பு சான்றிதழ் எடுத்துட்டு வாங்கன்னார்.அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

இன்னுமொரு சான்றிதழில் ஏன் பெயரில் பின்னால் அப்பாவின் முதல் எழுத்துக்கு பதில் முன்னாடி இருந்தது. இது இரண்டும் நீங்கள்தான் என எழுதி வாங்கி வர சொன்னார் .
சரி, மற்ற சான்றிதழ்களையும் காட்டி அவரிடம் ஏதும் குறை இருந்தால் சொல்ல சொன்னேன். அவர் " இல்லைங்க, இப்போ லஞ்ச் டைம் ஆச்சு " நீங்க சாயந்தரமா வாங்க.

மதியம் 4 மணி வாய் அவர் லஞ்ச் முடிஞ்சு வர வில்லை. யாருமே வர வில்லை. பியூன் சொன்னான் " நீங்க நிக்கிறது வேஸ்ட் ங்க. வருவாங்க ௧௦ நிமிடத்துல "டி" ன்னு போவாங்க. 5 மணி க்கு வருவாங்க , வீட்டுக்கு கிளம்ப பாப்பாங்க."

திட்டிகிட்டே வெளியே வந்தேன்

இதுதான் நடந்ததுன்னு ஏன் நண்பன்கிட்ட சொன்னா அவன் சொல்றான் " அதுக்குதான்டா கால் காசானாலும் கவர்மென்ட் காசு திங்கனும்கிறது ன்னு " . அப்போ அவனுக்கும் அங்க போயி வேலை செய்யலாம்ன்னு எண்ணம் இல்லை.

அப்புறம் யாரை குறை சொல்வது சொல்லுங்க .

No comments:

Post a Comment