கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, June 2, 2010

போம் யெஒரெஉம் கஐல் க்யெஔல் குறிகோ போம்

ஸ்ப்ரிங், சம்மர், பால், விண்டேர் அண்ட் ஸ்ப்ரிங்

என ஆங்கிலத்தில் அதன் தலைப்பை மொழி பெயர்க்கலாம்.

கொரியன் திரைப்படம். என்னை மிகவும் பாதித்த என்றே தொடங்க வேண்டும்.

கி-டுக்-கிம் என்பவர் எழுத்தும் இயக்கமும் நடிப்பும். ஆனால் நடிக்க வில்லை, இயக்க வில்லை, எழுதியும் இருக்க வில்லை. செதுக்கி இருக்கிறார் என்று சொன்னாலும் மிகை ஆகாது.

திரைப்படத்தின் துவக்கம், ஒரு பள்ளத்தாக்கின் நீர்நிலைக்கு நடுவே உள்ள ஒரு அழகான குடிசையின் முகத்தே. அந்த காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை கேமரா அப்பப்பா அருமை, அழகு, அற்புதம், இன்னும் என்னன்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும். நான்கு காலத்தையும் காட்டும் இந்த அற்புதம் அவருக்கு உதித்தது நமது கண்களுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

புத்த கொள்கைகளில் பிறலாத ஒரு புத்த துறவியின் கதை.

புத்த கொள்கைகளில் ஊறிய இயக்குனர் என்பதை கதைப் பாத்திரங்களுக்கு பெயர் வைக்காதது முதல் தெரியப் படுத்துகிறார். படத்தில் வரும் இரு காவல் காரர்களைத் தவிர யாருக்கும் பெயர் இல்லை.

தலைப்புக்கு ஏற்ற மாதிரி படம் வசந்த காலத்தில் ஆரம்பம். கல்லால் செய்யப பட்ட புத்தர் சிலை. புதுப் பெய்ன்ட் அடித்து நமக்கு சாமி படம் காட்ட வில்லை.

சாங் ஹோ ஹிம் என்ற அந்த சிறுவனைப் பல படங்களில் பார்த்து இருக்கலாம். நடிப்பில் அற்புதம். சிறுவனுக்கே உள்ள சேட்டைகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறான். பாம்பு, தவளை, மீன்களில் கல்லைக் கட்டும் போது சிரிப்பதும், அதை முதியவர் உணர்த்த , வந்து இறந்து கிடப்பதை பார்க்கும் போது அழுவதும் அழகு.

பிறகு ஒரு கோடைக் காலத்தில் அவன் இளைஞனாக காட்டப் படுகிறான். பெண் வாடையே இல்லாதிருந்தாலும் வயதில் காம உணர்வு இயற்கையானது என்பதை பாம்புகளின் புணர்ச்சியை பார்க்கும் போது அவனுள் மாற்றத்தை காட்டி அசத்துகிறார். அந்தக் கோடையில் ஒரு இளம்பெண் உடல்நிலை சரிப் படுத்த வேண்டி அங்கு அம்மாவுடன் வருகிறாள். அம்மா அவளை துறவியிடம் ஒப்புவித்து கிளம்புகிறார். இளைஞன் மற்றும் அந்த இளம்பெண் இடையேயான தனிமை உடலுறவு கொள்ள செய்கிறது . அதை அறிந்த அந்த துறவி உணர்ச்சிவசப் படாமல் இது இயற்கை, இதுதான் மருந்து எனும் பொழுது உலகின் மிகப் பெரிய உண்மையை யதார்த்தமாக சொல்லி விடுகிறார் இயக்குனர்.
அவளைப் பிரித்து அழைத்து செல்லும்பொழுது இளைஞன் கோபம் கொண்டு அவளுடைய ஊருக்கு செல்கிறான்.

அவன் செல்கிறான் ஆனால் கேமரா நகரவில்லை.

அந்த துறவியிடம் எந்த உணர்ச்சியும் இல்லை. அவரது வழக்கம் தொடர்கிறது.

திரும்ப கால மாற்றம். ஒரு மழைக்காலம்.
துறவிக்குத் துண்டு பிரசுரத்தின் மூலம் தெரிய வருகிறது அந்த இளைஞன் (இயக்குனர்) அவன் மனைவியைக் கொலை செய்து விடுகிறான் என்று. அங்கும் அமைதி. அவன் மீண்டும் இந்த இடம் தேடி வருகிறான், அதே கோபத்தோடு. கோபம் அவனைத் தற்கொலை முயற்சிக்கு தூண்ட அப்போது துறவி அவனுக்கு பொறுமையை புரிய வைக்கிறார். காவல் காரர்கள் அவனைக் கைது செய்து அழைத்து செல்ல வருகிறார்கள். அந்த இளைஞன் திரும்பி பார்க்கும் வரை அந்த படகு முன்னேற மறுக்கிறது .
புத்த பிட்சுகளின் வழக்கப் படி அவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்கிறார்.
அந்த முதிர் துறவியின் (இயங் சு ஒத் ) நடிப்பும், அவரது பாத்திரப் படைப்பும் படம் பார்த்த ஒரு எண்ணத்தை விரட்டுகிறது; புத்த பிட்சுவாகவே வாழ்கிறார்.

கால மாற்றம் . ஒரு பனிக் காலம் :
அவன் மீண்டு வருகிறான். அவனிடம் அமைதி. அவன் துறவி ஆகிறான். சிறிது நாட்களில் அவனிடம் ஒரு பெண்மணி வந்து ஒரு குழந்தையை ஒப்படைத்து செல்லும் பொழுது இறக்கிறாள். அந்த குழந்தை இவனுடையது. இயக்குனர் கிம் டுக் கிம் நடிப்பிலும் அசத்தல் .

கால மாற்றம் , ஒரு வசந்த காலம் :
மீண்டும் அந்த சிறுவன், மீன்களுடன், தவளையுடன், பாம்புகளுடன் விளையாட்டு.
சுபம்.

இந்த தலைப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு என நோக்கும் போது மனிதனின் இயல்புகளையும், காலத்தையும் மிக அழகாக ஒப்புமை செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
  • வசந்த காலம் : இளம் பருவம், கவலை தெரியாத பருவம்,
  • கோடைக் காலம் : மனித உணர்ச்சிகளின் அப்பட்டமான வெளிப் பாடு
  • மழைக் காலம் : மனத்தின் முதிர்வு
  • பனிக் காலம் : பொறுமை , எனக்குத் தெரிந்த வரை இது . இன்னும் இருந்தால்பின்னூடங்களில் தெரிவியுங்களேன்

கண்டிப்பாக அற்புதமான , எளிமையான, அழகான, நேர்த்தியான, நம்மை தொடுகின்ற படைப்பு

No comments:

Post a Comment