கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, June 4, 2010

நானும் அறிக்கை விடுறேன்

மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலர், ஜெயக்குமார் அவர்கள் அறிக்கையில் கூறிய விஷயம் " போலீஸ்காரர்களின் ஓட்டு தி.மு.க விற்கு இல்லை".

இவர் உரையை தயாரித்து சரி செய்துதான் பேசுகிறாரா. இல்லை வாயில் வருவதுதான் இவரது உரையா என எனக்கு ஐயம்.

இதை தெரிவிக்கும் போது , மற்றவர்கள் அவர்களுக்குதான் ஓட்டு போடுவார்கள் என்கிறாரா.
தனது அ.தி.மு.க விற்கு எப்படி ஓட்டு கேட்பது என்பதை விட்டு அவர்களுக்கு யாரெல்லாம் போட மாட்டார்கள் எனக் கூறுவது தி.மு.க வின் பலத்தை அல்லவா கூறுவதாய் உள்ளது. இன்னொன்று , இதை தி.மு.கழகத்துக்கு அறிவித்து அவர்கள் போலீஸ்காரர்களை கவனிக்க வழி செய்யும் எச்சரிக்கையாய் உள்ளதாய் தோன்றவில்லையா.

வடிவேலு ஸ்டைலில் " நானும் அறிக்கை விடுறேன், நானும் அறிக்கை விடுறேன் " விடுறார் போல.

இவர்கள் எல்லாம் இப்படி அறிக்கை விடுவதால்தான் 87 வயதிலும் கட்சியை வளர்க்க நான் இன்னும் இளைஞன் என்கிறார் கருணாநிதி.

திருமிகு கருணாநிதி அவர்களுக்கு,

முட்டாள்களின் மத்தியில் சாணக்கியன் என்று உங்களை சொல்ல மாட்டேன்.
ஆனால் , முட்டாள்களை முட்டாள்களாகவே வைத்திருக்கும் சாணக்கியம் உங்களுக்கு உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

அது இருக்கட்டும், ; இன்றும் நான் கட்சியை வளர்க்கும் பொருட்டு இளைஞன் என சொல்லும் போது ஸ்டாலின் தங்களை முறைத்ததாய் எனக்குத் தோன்றுகிறதே.

No comments:

Post a Comment