கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, June 9, 2010

இளைஞர்களே வாருங்கள் !!!

அதுவும் ஒரு கட்சி என்று அதைப் பற்றி ஒரு பதிவு எழுதுகிறான் என்று நினைக்க வேண்டாம். இன்று செய்தித் தாளில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம் . பா.ம.க விற்கு முடிவு எடுப்பதில் குழப்பமாம் . எதற்கு என்கிறீர்களா ? தி.மு.க வுடன் கூட்டணி அமைப்போமா வேண்டாமா என்றுதான்.

சில நாட்களுக்கு முன்னால் இதே பா.ம.க , தங்களின் முதல் எதிரி தி.மு.க என்றது. இது என்ன தமிழ்நாட்டு அரசியலில் புதுசா என்கிறீர்கள். ஆம். புதுசில்லைதான். ஆனால் இவ்வாறாக பேரம் பேசி கூட்டணி வைத்து, மாறி மாறி பேசி, இவர்கள் அரசியல் நடத்தும் கொடுமையை இப்படி அப்பட்டமாக செய்யும் அளவுக்கு அனைவரையும் முட்டாள் என நினத்திருக்கின்றனர்.

நாம் இருக்கட்டும், நம்மில் பலர் பா.ம.க விற்கு ஒட்டு போடப் போவதில்லை. அந்த வன்னியர் இனம் இன்னும் விழிக்க வில்லையா. இந்த பேரம் நடப்பது அந்த இனத்தின் உரிமைக்கா ? அந்த இனத்திற்கு வேண்டிய சலுகை வேண்டியா ? இட ஓதிக்கீடா ? இல்லையே !!

திருமிகு பாசமானவருக்கு எம்.பி பதவியும் , மந்திரி பதவியும் கிடைக்காதாம். அதனால், முடிவு எடுப்பதில் குழப்பம். இந்த தி.மு.கழகமும் அவர்கள் 2011 ல் கூட்டணியில் இருப்பதை வைத்து இடம் எனத் தெளிவாக பேரம் பேசுகிறது.

இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் , இந்த இடத்தில் குழப்பம் எனில் பா.ம.க உறுதி செய்ய வில்லை 2011 ல் யாருடன் கூட்டணி என்று. அப்படியானால் கூட்டணி மக்களுக்காகவோ, சாதி நலனுக்காகவோ, நாட்டு நலனுக்கோ, இல்லை, சேருமிடத்தின் கொள்கை பிடித்தோ இல்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது.

கொள்கை என்பது பேச்சளவில் தான் போலுள்ளது.
ஒரு சிறு கதை :

இரண்டு சிறு கிராமம், இரண்டும் வறண்ட பகுதி என்பதால் மற்ற பகுதிகளை கொள்ளை அடிப்பதுதான் அவர்கள் தொழில். எல்லாப் பகுதிகளையும் கொள்ளை அடித்த பின்னர் அந்த இரண்டும்தான் மிச்சம். இரண்டுக்கும் தெரிந்தது இரண்டு மட்டும்தான் மிச்சமென்று. ஒடுங்கியத் தலைவன் ஒன்கியத் தலைவனிடம் சொன்னானாம். எனது ஊரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எனது வீட்டை விட்டு விடு. எனது மகனுக்கு திரும்பவும் தலைவன் பதவியைக் கொடு . அவன் மற்றதைப் பார்த்துக் கொள்வான் என்று. கிராமம் கொள்ளையடிக்கப் பட்டது. அந்த கிராம மக்கள் அனைத்தையும் இழந்தனர். மகன் தலைவனானான் . உச்ச ஸ்தானியில் ஒலித்தது " வாழ்க " எனும் அந்த மக்களின் கூச்சல்.

சீமான் சொன்னது போல் , படித்தவன் வரும் வரை பொறம்போக்குகள் தான் நிரப்புவார்கள்.

No comments:

Post a Comment