கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, June 18, 2010

கவலை

சிறு வயதில் சிறு கல்லையோ , ஒரு காசையோ எடுத்து கொண்டு ஓடி , ரெயில் தண்டவாளத்தில் வைத்து ரெயில் ஓடியதும் ஓடி சென்று அந்த மெலிந்த காசைக் கொண்டு விளையாடுவது வழக்கம்.

தற்போது நான் அவ்வாறு செய்ய முயலுவேனானால் என்னைக் கைது செய்தார்களா என்றே என் வீட்டுக்குத் தெரியாது . அந்த அளவுக்கு நிலை தலைகீழ்.


இதிலும் கொடுமை என்னவென்றால் நாம் சுதந்திரம் சுவைத்து இப்பொழுது 60 ஆண்டுகள் தான் ஆகிறது. இப்போதே நம்மை மீறும் செயல்கள் தொடங்கியது என்றால், இன்னும் எத்தனை ஆண்டுகள் பக்கத்து வீட்டுக் காரனை நம்ப இயலும் என்றே தெரிய வில்லை. பக்கத்து காரர்களோடு ஒட்டி உறவாடிய நமது கிராமங்களிலும் இதே நிலைதான்.

அன்பு, நம்பிக்கை என்ற சொல்லை தமிழ் அகராதியில் தான் பார்க்க இயலும் என்பது துக்கத்துக்குரியது. எந்த செயலிலும் கவலை என்றால் மனிதனின் நிலை ?


ரெயில் பயணம் என்றால் வெடிகுண்டு கவலை !
லாட்ஜில் தங்கலாம் என்றால் கேமரா கவலை !
சுற்றுலாத் தளங்களில் எங்கு எப்பொழுது வெடிக்குமோ எனக் கவலை !
பக்கத்து சீட்டுக் காரன் எப்போது நம்மை கவிழ்ப்பான் என்று அலுவலகத்தில் கவலை !
எந்த மினனஞ்சலில் வைரஸ் வருமோ என அதை திறக்க கவலை !
தியேட்டர் சென்றால் இடிந்து விழுமோ எனக் கவலை !
தூங்கும் பொழுது காலை எழுவோமா எனக் கவலை !



எதுக்கெடுத்தாலும் கவலை , எதை எடுத்தாலும் கவலை !!

No comments:

Post a Comment