கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Sunday, August 8, 2010

எனது கனவு

தேரில் பயணம், கிடைத்த வரை இடம் என எனது தேரில் எனது நண்பனும். அவனுக்கு ஆசையோ என்னவோ எனது சாரதியாக வருகிறானாம். எனது நண்பனை அவ்வாறு ஏன் சொல்ல வேண்டும். அவனுக்கு ஆசையாம் குதிரை ஓட்ட அதனால் அவனே எடுத்து கொண்டான் என்பதே சரி.

முல்லைக்கு தேரைத் தந்து, பின்னாடியே காவலாளியை அனுப்பி இருப்பான் அந்த பாரி. ஆனா நான் அப்படியில்லை. என் நண்பனுக்கு தேர் என்ன ஊரே குடுப்பேன். அது என்னோடதா இல்லாதவரை எனகென்ன கவலை.

வானவெளியில் மிதப்பது போன்று எனது தேர் பயணம். சுற்றிலும் விண்மீன்கள் கண் மூடி மூடி திறக்க வரும் சப்தம் இரைச்சலாக கேட்கிறது . மிக அருகில் இருப்பதாலோ என்னவோ.

எதிரில் நாராயணா நாராயானா என்று நாரதரும் செல்கிறார். செல்லவில்லை என்னகாரியமோ, நிற்கிறார் அவர்.

சில்லென்ற காற்று எனது முகத்தில் முத்தமிட்டு கொண்டே இருக்கிறது. வாயுப் பகவான் மகள் போலும் . இப்படி கொடுக்கிறாள் அள்ளி, வாய் வலிக்காதோ. நல்ல வேளை, வாயுப் பார்க்கவில்லை இல்லையெனில் புயலெனப் பாய்ந்திருப்பான் .

முத்தம் மட்டும் சபதமில்லாமல், சுகம். இதற்கிடையில் அது யாரது அழகான தேவதை என்னை நோக்கி வருகிறாள். வாயுவின் மகளை விலக்கி கொண்டு. கொள்ளை அழகு. தேவ கன்னிகையோ . இல்லை தேவ மாதா, கையில் குழந்தை இருக்கிறதே. எனக்கு அருள் பாளிக்க வருகிறாள் போல. கையில் அட்சயப் பாத்திரம் வேறு.

பின்னால் எல்லோரும் ஆரவாரம். எனது நண்பனைப் பார்க்கிறேன் . திரு திருவென முழிக்கிறான்.
"டேய், வண்டி மூவ் ஆகா மாட்டேன்குதுடா. சிக்னல் ல மாட்டிகிட்டோம். பின்னாடி எல்லாரும் இந்த கத்து கத்து கத்துறானுங்க. எதோ அருந்த பன்றி மாதிரி "

என்னை நோக்கி வந்த பிச்சைக்காரி வேறு, பைசா கேட்டு, பாத்திரத்தோடு தொந்தரவு. எதிரே நின்று " கிளம்பு கிளம்பு " என காவல்காரர்.

1 comment: