கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Thursday, September 23, 2010

இசையின் இசை

இசையைக் கேட்பது என்பது கருவறை முதல் கல்லறை வரையிலும், குடிசை மட்டும் இல்லாமல் மாளிகை கூடங்களிலும் , பசித்தவனுக்கும் புசித்தவனுக்கும் பொதுவான ஒரு விஷயம். பொழுது போக்கு, நேரக் கழிவு என பலவாறு கொள்ளப் படும்.


சிலருக்கு படிக்கும் போது இசை, சிலருக்கு நடக்கும் போது, சிலருக்கு வேலை செய்யும் போது, சிலருக்குத் தூங்கும் போது , சிலருக்கு சமைக்கும் போது ( ஆண்கள் , பெண்கள் இருவருக்கும்), என்னைப் போன்ற சிலருக்கு அனைத்து செயல்களின் போதும் இசை.


இந்த களத்தில் விமர்சனம் பண்ணவும் இல்லை. பண்ண விழையவும் இல்லை.


இவ்வாறு என உணராமலேயே நம்மை முழுவதுமாய் ஆட்கொள்ளும் சக்தி கொண்ட இந்த இசையை கொண்டாட மட்டுமே வந்தேன்.


நான் பாரபட்சம் என்பதை துளியும் பார்ப்பதில்லை. TMS, எம். ராஜா காலத்திலிருந்து, இப்போது கார்த்திக், கதிஜா வரை கேட்பது என்பது எனக்கு நீர் குடிப்பது போன்றது.


இந்த விசயத்தில் இது காதலிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது தெளிவு. காதலில் துன்பம்தான் இறுதி என்று நண்பன் சொன்னாலும் அதை அனுபவித்து படும் அவஸ்தைகள் போலில்லாமல், சுகம் இதுவென சொல்லத் தெரியாமல் சுகத்தை மட்டுமே கொடுக்கும் இசையை நாம் ரசித்து கொண்டு இருக்கிறோம்.


அதுவும் சூழ்நிலைக்கு ஒப்ப, கேட்கக் கூடிய வகையில் திரை இசைப் பாடல்கள் பல.


சிலப் பாடல்களைக் கேட்கும் போது , எழுந்து ஆட தோன்றுகிறது . அந்தக் காலத்தில் பாட்டு பாடவா ஜெமினிஇலிருந்து இந்த காலத்தில் சிம்பு பாடல்கள் வரை


தேர்வுகளில் வெற்றி பெறும் போதோ , வேலை செய்யும் இடங்களில் சம்பள உயர்வோ கிடைக்கும் போது நண்பர்களோடு அனுபவிக்க சிறந்த பாடல்கள் மடைதிறந்து முதல் பல என சொல்லலாம்.


கொண்டாட்டம் சிறிது அதிகமாகி மது வரை செல்லும் போது கூட ஊறுகாயோடு இது ஒரு பொன் மாலை பொழுது கேட்கும் போது மகிழ்ச்சி உச்சம்.

நான் புதிதாக ஒலிபெருக்கி வாங்குகையில் எ .ர ரஹ்மான் பாடல்கள் , ஆங்கில பாடல்கள் கேட்கிறேனோ இல்லையோ ராஜா ராஜாதி ராஜா என அக்னி நட்சத்திரமும் , சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என எம்.எம். காம ராஜனும் கேட்காமல் இருந்ததில்லை.

காதல் சுகத்தில் கனவு காணும் போது , பனி விழும் மலர் வனம் முதல் , மாலை என் வேதனை கூட்டுதடி வரைக் கேட்பது சிறப்பு.

மனதிற்கு உந்துதல் வேண்டும் போது கவிதைப் பாடு குயிலே இனி வசந்தமே என உயரிய வரிகளில் இசைநயம் சொட்ட கேட்பது சுகம்.


பயணத்தின் போது செந்தாழம் பூவிலிருந்து , என்றென்றும் புன்னகை வரை;

இதையெல்லாம் இல்லாமல் சிலப் பாடல்களைக் கேட்கும் போது எந்நேரங்களிலும் மனதினில் மகிழ்ச்சி நம்மை அறியாமல் வரும். அதில் மாங்குயிலே, அக்கம் பக்கம் பாரடா பாடல்களும், ஊரு சனம் தூங்கிடுச்சு என ஜானகியின் மதுர குரலும், இன்னும் பல பாடல்கள் இளையராஜாவின் தானம் நமக்கு.

இன்னும் நிறைய கூறலாம் . தொடரலாம்

No comments:

Post a Comment