கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Sunday, August 8, 2010

நானும் நானும்

சென்ற வாரம் 4.8.2010 தேதியிட்ட ஆனந்த விகடனில் கோபி நாத்தின் அறிவுரை "நீயும் நானும்" பக்கத்தில் வந்துள்ளது. அனைவரும் அறிந்த ஓன்று என்றாலும் சொல்லத் தகுந்தது.

ஆனால் கைப் பேசியை வைத்து வேற தலைப்பில் உரையாற்றி இருக்கலாம். நகைச் சுவையாகவாவது இருந்திருக்கும். நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கும் போது, ஒரு நண்பன், நண்பனுக்கு அழைப்பு விடுத்து நலமா, சாப்பிட்டாயா எனக் கேட்பது நேர விரயம் என்று அவர் சொல்வதை ஏற்க வேண்டாம் என முடிவெடுத்தாலும் அது ஒரு அபத்தம் என்பதை சொல்லாமல் இருக்க இயலாது.

ஒரு இளைஞன் நான்கு மணி நேரம் அமர்ந்து கைப் பேசியில் விரயம் செய்கிறான் என்பது சரி. வேறு என்ன காரியங்களுக்கு செய்கிறான் , தோழிகளிடம் கடலையா ? பார்க்கத் தகாத சிறு சிறு ஒளிப் படங்கள் வைத்து இருக்கிறானா ? இல்லை அவன் விளையாட்டுக்கு அடிமையா என்பது ஆராய வேண்டும்.

கடிதப் போக்குவரத்து குறைந்து கைப்பேசி வந்ததும் இரண்டு நிமிடமோ, இரண்டு மணி நேரமோ தனது கருத்தை, தனது தனிமையை, தனது நிலைமையை நிவர்த்திக்க எண்ணி நண்பனிடம் பேசும் ஒருவன், காரியமாகத் தான் பேச வேண்டும் என்பது மறுக்கத் தக்கது.

இது அவரது முன்னது கட்டுரைகளுக்கு எதிரானது . ஏதாவது காரியமாகத்தான் பேச வேண்டும் என்றால் , வாழ்க்கை இயந்திரமயமானதாகத் தோன்றாதா? பின் வாழ்க்கையை ரசிப்பது எவ்வாறு.

நான் பார்த்த காட்சியை, பெண்ணின் அழகை , நான் ரசித்து உண்ட உணைவை , நான் வாங்கிய புது பொருளை, கேட்ட பாடலை ஆயிரம் கல் தொலைவில் இருக்கும் எனது நண்பனுடன் பகிர முடிய வில்லை எனில் பயன் என்ன ?.

எனக்கு " into the wild " என்ற ஒரு ஆங்கிலப் படம் தான் நினைவில் வருகிறது . பகிராத எதுவும் சந்தோசத்தை தராது.

இந்த கருத்துக்கள் தொடர்ந்தால், அந்த பக்கங்கள் நீயும் நானும் ஆகா இராது; "நானும் நானும்" ஆகிவிடும் .

No comments:

Post a Comment