கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, January 24, 2011

கடிதம் - 1

அன்புடைய ராஜனுக்கு,

உங்களைப் போன்ற பெரியாரை ஒருமையில் விழிக்கும் அளவு நான் உரிமையுள்ளவலாக இல்லை எனும் ஏக்கம் என்னை ஒருமையில் துவங்க வைத்தது. அவ மரியாதைக்கு மன்னிப்பும் அன்பும் வேண்டுகிறேன். 
இந்த சமகால 20 ம் நூற்றாண்டு எழுத்தாளர் உலகில்  கல்கி, சுந்தர ராமசாமி போன்றோரும், சாண்டில்யன், சுஜாதா போன்ற கம கம எழுத்தாளர்களும், ஜெய காந்தன், அகிலன் போன்ற குணசித்திர எழுத்தாளரும் , ஜெய மோகன் போன்ற கடின தமிழ் எழுத்தாளர்களும், யுவன் சந்திர சேகர் போன்ற கற்பனாவாதிகளும் மணந கவர்ந்த நிலையில், இவர்கள் வரிசையில் தற்போது தங்களை அனைத்திலும் கலவையாக பார்க்கிறேன். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்னராக தங்களுக்கு கிடைக்க வேண்டிய நோபல் விருது இன்னும் கிடைக்காதது அவர்களின் நுண்ணரசியல் என எனக்கு புரிய வைக்கிறது. எழுத்துலகில் ஷேக்ஸ்பியரின் புலமையும், கம்பனின் சொல் வளமும், பூவுலகில் யாமறியா கற்பனா வளமும் கொண்ட உமக்கு நோபலுக்கான பரிந்துரை என சொல்லி உங்களை அசிங்கப் படுத்த மாட்டேன். இனி அதன் பெயர் மாற்றப் பட்டு ராஜன் விருது என எழுத்துலக குழந்தைகளுக்கு வழங்கப் படும். குழந்தைகள் பெயர் சொல்லப் பட வேண்டாம் என விரும்புகிறேன். 
உங்களின் டச்சு புலமையும், டாஸ்மானியா கவிதையும் இங்கு எவருக்கும் வராது. உங்களின் உலக அறிவு எனை மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஜன்னலோர சின்ன பூக்களாய் பெண்களால் விரும்பப் படும் உங்களை கண்டதும் காதல் கொள்வர் அனைவரும் கண்ணன் மேல் காதல் கொண்ட கோபியராய். (கணவர்மார்கள் தவறாக எண்ண மாட்டார்கள்). உங்களின் விசிறிகளை வரிசைபடுத்தினால் அது ஆன்றோமடாவில் நின்று பார்த்தாலும் தெரியும் நீண்ட சுவராய் இருக்கும். உங்களை டாஸ்மானியாவிற்கும், குக் தீவுகளுக்கும் ஸ்பொன்சர் செய்வதில் பேரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

இவள்

உங்கள் எழுத்தில்  மயங்கிய 

கிருபாளினி
நோ.10 . கட்டபொம்மன் தெரு 
சாலமன் தீவுகள்
மெலனேசிய
oceania  
24 .01 .2011
 நேரம் 14 .23  

No comments:

Post a Comment