புலம்பல்
- உனக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என்றெண்ணி முள்ளே இல்லாமல் முல்லையாய் வந்தேன். அவள் பல்லில் பார்க்கிறாய் என்னை # பூக்களின் புலம்பல்
- மயிர் விழுந்தால் உயிர் துறக்கும் கவரிமான்; இதழ் இழந்தால் உயிர் துறப்பேன் நான் # பூக்களின் புலம்பல்
- நீ அவர்களை பார்த்து ரசிப்பதால், எனக்கு பெண்களைப் பிடிப்பதில்லை # பூக்களின் புலம்பல்
- பூத்ததும் மணம் பெண்களுக்கு; பூத்ததும் மரணம் எங்களுக்கு # பூக்களின் புலம்பல்
- உனக்காக காத்திருப்பேன் எனக் கூற இயலாது; வாடி விடுவேன், ஓடி வா # பூக்களின் புலம்பல்
- தோட்டத்தில் கூட்டமாய் இருக்க வேண்டாம்; உன் வீட்டு தொட்டியில் தனித்திருக்க வரம் கொடு # பூக்களின் புலம்பல்
- கூவிகூவி விற்கப் படுகிறேன்; நானும் விபசாரியோ! இல்லை,நவீன சுயம்வரம் மூலம் ஒரே புகுந்த வீடு. பின் மரணம். பத்தினிதான்#பூக்களின் புலம்பல்
- அனைத்து இடங்களிலும் பூக்கும் நான் உன் பாதம் படும் இடங்களில் பூப்பதில்லை; பூத்து என்ன பயன் # பூக்களின் புலம்பல்
- பூ என சொல்லாதே; மலர் என சொல்; சிறிது நேரம் கூடுதலாக எனக்கு ஆயுள், உன் வாயில் # பூக்களின் புலம்பல்
- நீ பறித்தாய் சுக வேதனை; அவளிடம் கொடுத்தாய் மரண வேதனை # பூக்களின் புலம்பல்
- காதலியால் மலைக் காட்டுக்குத்தான் உடன் வர முடியும்; எந்த காடானாலும், இடுகாடானாலும் நான் உன்னருகில் # பூக்களின் புலம்பல்
- பொதுவாக மின்னஞ்சலில் எனை அனுப்பும் போது மணம் வீசுவதில்லை என்பதை நான் குறையாக கொண்டதில்லை; உன் இன்பாக்ஸ்இல் வரும் வரை#பூக்களின் புலம்பல்
- மிதப்பாய் இருந்தேன் கறுப்பே என்னிடம் இல்லை; உன் மனம் பார்த்ததும் பிரமித்தேன் கறுப்பு எனும் வார்த்தைக்கு அர்த்தமே இல்லை#பூக்களின் புலம்பல்
- பூக்களைப் பறிக்காதீர்கள் என போர்டு வைத்தவனை, கொலையும் பண்ணுவேன் உன்னை அவன் தடுக்கும் போது # பூக்களின் புலம்பல்
- குரங்கு கையில் இருக்கும் போது வலிக்க வில்லை; உன் கையில் இல்லையெனும் போது வலி பொறுப்பதில்லை # பூக்களின் புலம்பல்
- 15 வயசு வரைக்கும் உனைக் காத்திருக்க வைக்க முடியாமல், 12 வயதிலேயே பூக்கிறேன் நான் # (குறிஞ்சி) பூக்களின் புலம்பல்
- உன் கையிலிருந்து பிரிந்து கடவுளிடம் போவதானாலும் மனம் ஒப்பவில்லை எனக்கு. # பூக்களின் புலம்பல்
- அவளை மயக்க என்னை வாங்கி செல்கிறாய், என்னை மயக்கியது நீ என்பதை அறியாமல் # பூக்களின் புலம்பல்
- உன் கட்டிலில் என்னைத் தொங்க விட்டு அவளை அணைக்கிறாய் முதலிரவில். பூ பாவம் பொல்லாதது # பூக்களின் புலம்பல்
- அவள் எந்தன் மணத்திற்காக விரும்புகிறாள் ; நீ என் மனதிற்காக விரும்பு # பூக்களின் புலம்பல்
- உன் கரங்களால் மரணம்; எனக்கு அதுவே வரம் # பூக்களின் புலம்பல்
- காதல் உணர்வு தூண்ட, மல்லிகையை மட்டும் ஏன் கூறினர்? # பூக்களின் புலம்பல்
- அல்லி, முல்லை, மல்லிகை, குறிஞ்சி என பல பெயரு; ஆனால் நீதான் எனக்கு உயிரு # பூக்களின் புலம்பல்
- மணம் என்றால் கையிலிருந்து தலையில் எறிகிறார்கள்; பிணம் என்றால் தலையிலிருந்து சாலையில் எறிகிறார்கள் # பூக்களின் புலம்பல்
- எங்களைக் கசக்குவது பிறர் கண்களுக்கு கசக்கலாம்; உன்னில் கசங்குவது என்றோ ? # பூக்களின் புலம்பல்
- சூரியனைப் பார்த்ததும் விரிகிறேன் மலர்வதற்கு ; உன்னைப் ஆர்த்தும் குனிகிறேன் வெட்கத்திற்கு # பூக்களின் புலம்பல்
- கடவுள் என்னைப் பார்த்தால் கருணைதான் பிறக்கும்; நீ என்னைப் பார்க்கும்போதுதான் வாழ்க்கைக்கு அர்த்தமே பிறக்கும் # பூக்களின் புலம்பல்
- அவள் தலையில் மணம் வீசுவதை விட உன் கையில் பிணமாவதே விருப்பம் # பூக்களின் புலம்பல்
- பூஜை அறையை அலங்கரிப்பதை விட, உன் படுக்கை அறையில் கசங்குவதே சுகம் # பூக்களின் புலம்பல்
- செடியிலேயே இருந்தா காய்ந்துவிடுகிறேன் ; உன் மடியைக் கொடு சாய்ந்து கொள்கிறேன் # பூக்களின் புலம்பல்